ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவையில் காங்கிரசார் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிப் பெற்றதை அடுத்து கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை துறையினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதை அடுத்து, கோவை ஆத்துப்பாலம் பகுதியில் காங்கிரஸ் மனித உரிமை துறையினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக தென்னரசு, தேமுதிக ஆனந்த், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.காலை முதலே தி.மு.க.கூட்டணிக் கட்சி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளரான தென்னரசுவை விட மூன்று மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னணி பெற்றார். இறுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.



இதை அடுத்து கோவையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையினர் கோவை கரும்புக்கடை பகுதியிலிருந்து ஆத்துப்பாலம் வரை வெற்றி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.



தொடர்ந்து அந்த பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநிலச் செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா, மாவட்ட தலைவர் சாரமேடு சம்சு, மற்றும் நிர்வாகிகள் ஜான்சன் அக்கீம், சிக்கந்தர், கனி, நசீம் பைசல், அபு, நஜ்முதீன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...