பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்..! - உடுமலை நகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

உடுமலை அருகேயுள்ள ராமசாமி நகரில் தனிநபர் இட ஆக்கிரமிப்பு குறித்து அளவிட வந்த நகராட்சி அதிகாரிகளிடம், கடைகள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடுமலைப்பேட்டை அருகேயுள்ள ராமசாமி நகர் பகுதியில் அப்பகுதி மக்கள் சார்பில், புதிதாக விநாயகர் கோவில் ஒன்றை கட்டி வந்தனர். இந்நிலையில் அதன் அருகில் உள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தையும் சேர்த்து கோவில் கட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ராமசாமி நகர் பகுதிக்கு சென்று விநாயகர் கோவில் கட்டியுள்ள இடத்தை சர்வேயர் வைத்து முறைப்படி அளவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.



இந்நிலையில், போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் வலியுறுத்தினர்.

மேலும், போக்குவரத்திற்கு இடையூறாக கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் சீட்டுகள் உள்ளிட்டவைகளையும் முறைப்படி அகற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...