கோவையில் ஏலச்சீட்டு நடத்தி பண மோசடி - தம்பதி உட்பட நான்கு பேர் கைது

ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கி அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நிறுவனத்தின் உரிமையாளரான சதாசிவம், அன்னபூரணி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: அதிக வட்டி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்ளிட்ட 4பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொள்ளாச்சி- கோட்டூர் சாலை அருகே உள்ள அண்ணாமலையார் அவன்யூ பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் ஆனைமலை சிட்ஸ் பொள்ளாச்சி பிரைவேட் லிமிடெட், அண்ணாமலையார் அண்ட் கோ, அண்ணாமலையார் இன்வெஸ்ட்மென்ட் & பைனான்ஸ், ஸ்ரீ உண்ணாமலை அம்மன் பைனான்ஸ், ஸ்ரீ அன்னபூரணி சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சதாசிவம் சிட்பண்ட்ஸ் ஆகிய ஆறு நிதி நிறுவனங்களையும் சதாசிவம் மற்றும் அவரது மனைவி அன்னபூரணி, மணிகண்டன், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் நடத்தி வந்தனர்.

இவர்களது நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் 18 சதவீதம் வட்டி தருவதாகக் கூறியும், பல்வேறு விதமான ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களிடமிருந்து டெபாசிட் பணத்தைப் பெற்றுள்ளனர்.



ஆனால் அவர்கள் தெரிவித்த குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், நான்கு பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...