அமராவதி அணையில் இருந்து மார்ச் 31வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை!

உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து மார்ச்.2 முதல் வரும் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக மார்ச்.2 முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் உள்ள 8 பழைய ராஜ வாய்க்கால் பாசன பகுதிகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆற்று மதகு வழியாக விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் 31ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.



மொத்தம் 31 நாட்களில் 21 நாட்கள் தண்ணீர் திறப்பு, 10 நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் மொத்தம் 453.60 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...