கோவையில் பெண் காவல் ஆய்வாளருக்கு பரிவட்ட மரியாதை - கோனியம்மன் கோயில் நிர்வாகம் கவுரவிப்பு!

கோவையில் சமீபத்தில் முடிந்த கோனியம்மன் கோயில் திருவிழாவில் திருட்டு சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக கண்காணிப்பு பணி மேற்கொண்ட பெண் காவல் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, கோயில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவில் மாசி தேரோட்டம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர் திருவிழாவிற்கு பெரிய கடை வீதி போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில் பெரிய கடை வீதி காவல் ஆய்வாளருக்கு பரிவட்டம் கட்டுவது வழக்கம். அதன்படி கோவில் நிர்வாகத்தார் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் ஆய்வாளர் லதாவிற்கு பரிவட்டம் கட்டி, தேரை வடம் பிடித்து இழுக்க அழைப்பு விடுத்தார். பெண் போலீஸ் ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டுவது இதுவே முதல் முறையாகும்.



இதற்கு முன்பு, தேரோட்டத்திற்கு அங்கு பணியாற்றிய ஆண் ஆய்வாளர்கள் பரிவட்டம் கட்டப்பட்டு தேரை வடம் பிடிப்பர். இந்த முறை பெண் ஆய்வாளர் வடம் பிடித்து இழுத்துள்ளார். அவருடன் மாநகர துணை ஆணையர் சந்தீஷ் உள்ளிட்ட போலீசாரும் பரிவட்டம் கட்டியவாறு தேரோட்டத்தை நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவின்போது சின்ன சின்ன திருட்டு சம்பவங்கள் நடைபெறும். அதனை தடுக்கும் வகையில், இந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் சாதாரண உடைகளில் மக்களுடன் மக்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் இந்த முறை ஒரு திருட்டு சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...