தாராபுரம் அருகே மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.22 கோடிக்கு பருத்தி ஏலம்

திருப்பூர் மாவட்டம் மூலனூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலகத்தில் பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8270-ம், குறைந்தபட்சவிலை ரூ.6800-ம் விலை நிர்ணயிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்திவிற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 586 விவசாயிகள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் வந்திருந்து மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

பருத்திக்கு அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8270-ம் குறைந்தபட்சவிலை ரூபாய்.6800-ம் சராசரி விலை ரூ 7400-ம் வணிகர்கள் நிர்யணித்தனர். விற்பனைக்கு வந்திருந்த 5255 மூட்டை பருத்தி (1671.66 குவிண்டால்) ரூ.1,22,96,760/-கோடிக்கு 16 வியாபாரிகள் ஏலம் மூலம் கொள்முதல் செய்தனர்.

இந்தத் தகவலை முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...