பல்லடம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அருள்புரத்தைச் சேர்ந்த தர்ஷனா என்ற குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.


திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையின் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த பல்லடம் அரசு மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை பெரும் அளவிற்குப் படுக்கை வசதிகளுடன் கூடிய பெண்கள் வார்டில் உள்ள ஒரு பகுதியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.



இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென பெண்கள் வார்டு கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சிகிச்சைப் பெற்று வந்த அருள்புரத்தைச் சேர்ந்த தர்ஷனா என்ற குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இதைப் பார்த்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.



இந்நிலையில் அங்குச் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சில நோயாளிகள் மருத்துவமனையில் உள்நோயாளி உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தின் வெளியே அமர்ந்துள்ளனர். அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் நோயாளிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...