தொண்டாமுத்தூர் அரசுக் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் தொடக்கம்

தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. இதில் கல்லூரியினுடைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.



கோவை: தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முனைவர் பாபு மேலாண்மைத் துறை தலைவர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய கல்லூரியினுடைய முதல்வர் முனைவர் தேவராஜ் அருமை நாயகம், இளம் வயதிலேயே பிறருக்கு உதவும் எண்ணத்தை வளர்த்து தன்னை போல் பிறரை நேசிக்க வேண்டும் என்று தலைமை உரை நிகழ்த்தினார்.



அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினரான முனைவர். அகிலா இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் பாரதியார் பல்கலைக்கழகம் அவர்கள் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தை தொடக்கி வைத்து கல்வியின் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்து நாட்டை வல்லரசாக முயன்றிட வேண்டும் என்று அப்துல்கலாமின் பொன்மொழிகளின் வழி சிறப்புரை வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து கல்லூரியினுடைய முன்னாள் முதல்வர் பேராசிரியர் அன்பழகன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். அவர் தனது சிறப்புரையில் மாணவர்கள் அறிவோடு அன்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்பின் வழியது உயிர்நிலை என்ற கருத்தை முன் வைத்தார். அரசு கலைக் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் முனைவர் சிவச்சந்திரன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...