பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போல வெளியான வீடியோ போலியானவை - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

வட இந்திய இளைஞர்கள் தாக்கப்படுவது போல பரப்பப்படும் 2 வீடியோ-க்களும், தமிழகத்தில் நடந்த இரண்டு சம்பவங்கள் சம்பந்தப்பட்டது. இதற்கும் வட இந்தியர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போலியான வீடியோக்களை பரப்ப வேண்டாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கோவை: பீகார் இளைஞர்கள் தாக்கப்படுவது போல் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ காட்சி போலியானவை எனத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் பணிபுரியும் பீகார் இளைஞர்கள், உள்ளூர் மக்களால் தாக்கப்படுவதுபோல 2 வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. முக்கியமாக இந்த வீடியோக்கள் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வேகமாகப் பரவியது.

இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தமிழக காவல்துறை அந்த வீடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திர பாபு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது,

சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது. அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களைத் திரித்து வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர் வாசிகள் மோதிக் கொண்டது ஆகும்.

இதுதான் உண்மை தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...