தாராபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - கோவில் பூசாரி பலி!

தாராபுரம் அருகே தளவாய்பட்டினத்தைச் சேர்ந்த கோவில் பூசாரியான சோமசுந்தரம் (57), தனது மனைவியுடன் உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்தில் சோமசுந்தரம் உயிரிழந்தார்.


திருப்பூர்: தாராபுரத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கல் மோதிக் கொண்ட விபத்தில் கோவில் பூசாரி பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம் (57). கோவில் பூசாரி. இவருடைய மனைவி தனலட்சுமி (55). இவர்கள் இருவரும் இரவு இருசக்கர வாகனத்தில், உடுமலை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது செலாம்பாளையத்தை சேர்ந்த கோகுல் (18) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சோமசுந்தரம் வாகனம் மீது மோதியது.

இதில் பூசாரி சோமசுந்தரம் அவரது மனைவி தனலட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த கோகுலும் கீழே விழுந்தார். அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூசாரி சோமசுந்தரம் உயிரிழந்தார். அவர் மனைவி தனலெட்சுமி மற்றும் கோகுல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...