கோவை ரயில் நிலையத்தில் குவியும் வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊருக்கு பயணம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தியை அடுத்து கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வமாநிலத்தவர்களை தாக்கும் பொய்யான வீடியோ வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கோவையில் ஜவுளித்துறை, தொழில்துறை உள்ளிட்டவற்றில் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு ஒரு சில வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே செல்கின்றனர்.



பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.



கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநில தொழிலாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுரையின் பேரில், அவர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.



இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், தாங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் செல்கிறோம். இங்கு அமைதியாக தான் உள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களால் ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், அச்சத்தால் தங்களை புறப்பட்டு வரும்படி நிர்ப்பந்திப்பதாகத் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வடமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படும் எனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...