கோவை ரயில் நிலையத்தில் குவியும் வடமாநில தொழிலாளர்கள் - சொந்த ஊருக்கு பயணம்

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான வதந்தியை அடுத்து கோவை ரயில் நிலையத்திலிருந்து பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வமாநிலத்தவர்களை தாக்கும் பொய்யான வீடியோ வெளியாகி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது கோவையில் ஜவுளித்துறை, தொழில்துறை உள்ளிட்டவற்றில் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சிகளை பார்த்துவிட்டு ஒரு சில வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கே செல்கின்றனர்.



பீகார், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.



கோவை ரயில் நிலையத்தில் காத்திருந்த வடமாநில தொழிலாளர்களிடம் கோவை மாநகர காவல் ஆணையாளர் அறிவுரையின் பேரில், அவர்களிடம் காவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தினர்.



இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், தாங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் செல்கிறோம். இங்கு அமைதியாக தான் உள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வீடியோக்களால் ஊரில் உள்ள தங்களது குடும்பத்தினர், அச்சத்தால் தங்களை புறப்பட்டு வரும்படி நிர்ப்பந்திப்பதாகத் தெரிவித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வடமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படும் எனச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...