கோவையில் கூடுதல் தெருநாய்கள் கருத்தடை மையங்கள் அமைக்க திட்டம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் கீழ் 5,000 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இதற்காக கூடுதலாக தெருநாய்கள் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் கூடுதலாக தெருநாய்கள் கருத்தடை மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம், ராமநாதபுரம், ஸ்ரீபதி நகர், கரும்புகடை, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாய்கள் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவதால் அச்சத்தில் சிலர் தடுமாறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்த பகுதிகளில் உள்ள குழந்தைகள் தனியாக நடக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சமீபத்தில், ரோஸ் கார்டன் பகுதியில் இதுபோன்ற ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. அங்கு ஒரு சிறுமியை இரவில் நாய்கள் சூழ்ந்த நிலையில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினர்.

இந்நிலையில், ஒண்டிப்புதூர், சீரநாயக்கன்பாளையம், உக்கடம் ஆகிய இடங்களில் தெருநாய் கருத்தடை மையம் செயல்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் 2,500 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

இந்த ஆண்டு மண்டலத்துக்கு 1000 வீதம் 5000 தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி மூலம் ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதுகுறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது, பொது பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தெருநாய் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதில் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறோம். ஆனால், இப்பிரச்சினையை முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை.

கருத்தடை மையத்தை மேலும் விரிவுபடுத்தும் பணியில் எங்கள் குழு செயல்பட்டு வருகிறது. நகரில் மேலும் இரண்டு மையங்களை முன்மொழியும் திட்டம் பரிசீலனையில் உள்ளது, முடிந்தால் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் இது குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...