மடத்துக்குளம் அருகே கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி - போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

மடத்துக்குளம் அருகேயுள்ள மெட்ராத்தி பகுதியில் 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே 80 அடி கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை வனத்துறையினர், ஒரு மணி நேரம் போராடி உயிருடன் காப்பாற்றினர்.

மடத்துக்குளம் அடுத்த மெட்ராத்தி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயியான இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது 6 மாதம் வயதுடைய நாட்டு காளைக்கன்று ஒன்று எதிர்பாராத விதமாக தோட்டத்திலுள்ள கிணற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 80 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 40 அடி அளவுக்கு தண்ணீர் இருந்தது. இந்நிலையில், தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த கன்றுக்குட்டியை மீட்க முடியாத நிலையில், உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.



உடனடியாக நிலைய அலுவலர் கோபால் தலைமையில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் கயிறுகள் உதவியுடன் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி கன்றை பத்திரமாக மீட்டனர்.



கிணற்றில் தத்தளித்த கன்றுக்குட்டி மீட்கப்பட்டவுடன் கிணற்றின் அருகே நின்றிருந்த தாய்ப்பசுவிடம் உற்சாகமாய் தாய்ப்பால் அருந்தியது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

மடத்துக்குளம் பகுதியில் கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் கைகூப்பி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடரும் கொலை சம்பவங்கள்: ஆலாந்துறையில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக்கொலை

கோவை ஆலாந்துறையில் நாகராஜ் (60) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை போ...

இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...