பல்லடம் அருகே மது அருந்தியவரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட மூவர் கைது!

பல்லடம் அருகே வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் டாஸ்மாக் கடை அருகில் அமர்ந்து மது அருந்திய நபரை மிரட்டி, 3 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மது அருந்தி கொண்டிருந்தவரிடம் நகைகளை பறித்துச் சென்ற மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அருகேயுள்ள சேடபாளையம் அடுத்த குமரன் கார்டனில் வசித்து வருபவர் அசோக் குமார். இவர் நேற்று பிற்பகல் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடத்தில் அரசு மதுபான கடைக்கு அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் மதுபோதையில் இருந்த அசோக்குமாரை மிரட்டி அவர், அணிந்திருந்த மூன்று சவரன் செயின் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அசோக்குமார், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை மூவரையும் பிடித்து கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.



தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அம்மா பாளையத்தை சேர்ந்த தாமரை சந்திரன் (19), திண்டுக்கல் மாவட்டம் தருமத்துபட்டியை சேர்ந்த பிரவீன் குமார் (26) மற்றும் அருள் புறத்தைச் சேர்ந்த ராகுல் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...