எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017”

எப்ஐசிசிஐ லேடீஸ் அமைப்பின் கோவை பிரிவு சார்பில் கோவையில் மகளிர் தொழில்முனைவோர் “புஃளோ பஜார் 2017” கண்காட்சி மற்றும் விற்பனை பிப்ரவரி 18ம் தேதியன்று துவங்கி ஞாயிறன்று (இன்று) நடைபெற்று வருகிறது. 



ஃபிக்கி (எப்ஐசிசிஐ) லேடீஸ் ஆர்கனைசேஷனின் கோவை பிரிவு சார்பில், மகளிர் தொழில் முனைவோர் பொருட்காட்சி, “உமன் என்டர்பிரனர் பஜார் 2017” எனும் பெயரில் கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமணமண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, தயாரிக்கப்படும் மகளிர் உற்பத்தி பொருட்கள் இங்கு 6-வது ஆண்டாக கண்காட்சியாக நடைபெற்று வருகிறது.

கோவையில் பெண் தொழில் முனைவோர், ஆண்களுக்கு சவாலாக பல பயனுள்ள பொருட்களைத் தயாரிக்கின்றனர். இந்த கண்காட்சி விரிவான தொடர்புகள் மற்றும் மேம்பாட்டுக்கு, மகளிருக்கு உதவும் ஐடியாக்களை பகிர்ந்து கொள்ளுதல், புதிய வாய்ப்புகள் என்று உற்சாகமாக தகவல் பரிமாற்றம் பெற்று பயன்பெறவும் இந்த பொருட்காட்சி பெரிதும் உதவுவது கடந்த கால அனுபவமாகும். முழுமையாக, வணிக வளர்ச்சிக்கு பலவகையிலும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துகிறது. 

துவக்க நிலையிலுள்ள மகளிர் தொழில் முனைவோர், இடைநிலையில் உள்ளவர்கள், டாப் இடத்தில் உள்ளவர் என்று அனைவரும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர்.



இதில் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஃபாஷன் உடைகள், சாரீஸ், சல்வார், பிளாக் பிரிண்ட்ஸ், காலனிகள், டெரகோட்டா ஜீவல்லரி, வெள்ளி மற்றும் செயற்கை ஜுவல்லரி, கற்கள் பதித்த ஆபரணங்கள், லினன், வீட்டு அலங்காரம் மற்றும் பரிசுப் பொருட்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பான தயாரிப்புகள் இன்ஜினியரிங் பொருட்கள் என ஏராளமான மகளிர் படைப்புகள் வாங்கலாம்.



முன்னதாக இந்த கண்காசியின் துவக்க விழாவில் கோவை, சுகுணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சுகுணா லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...