கோவையில் 50 பந்தய புறாக்கள் திருட்டு - வெளிமாநிலத்தில் விற்க முயற்சியா? என விசாரணை

கோவை போத்தனூரில் வீட்டின் மொட்டை மாடியில் ரகு என்பவர் வளர்த்து வந்த 50-க்கும் மேற்பட்ட பந்தயப் புறாக்கள் மற்றும் 4 சேவல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை போத்தனூர், அண்ணா நகரை சேர்ந்தவர் ரகு (வயது25). இவர் தனது வீட்டு மாடியில் புறா மற்றும் சேவல்களை வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் அனைத்தும் பந்தய புறாக்கள். இந்த நிலையில் நள்ளிரவு வீடு புகுந்த மர்ம நபர்கள் புறா கூண்டில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பந்தய புறாக்களை திருடி சென்றனர்.

மேலும், அங்கிருந்த நான்கு சேவல்களையும் திருடி சென்றுள்ளனர். காலையில் வழக்கம்போல் புறாவுக்கு தண்ணீர் வைக்கவும், இரை போடவும் ரகு சென்று பார்த்தபோது புறா மற்றும் சேவல் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போத்தனூர் காவல் நிலைய போலீசார் புறா திருடர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருடப்பட்ட புறா மற்றும் சேவல்களின் மதிப்பு ரூ.60 ஆயிரம் எனத் தெரியவந்துள்ளது. பந்தய புறாக்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும், அந்த நோக்கத்தில் இந்தப் புறாக்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...