கோவையில் முதியவரைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - சிறுவர்கள் 3 பேர் கைது!

கோவை சிவானந்தகாலனி சாலையில் இரவில் பப்புசிங் என்ற முதியவர் நடந்து சென்றபோது, அவரை அடித்து துன்புறுத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில்16, 17 வயது என 3 சிறுவர்கள் கைதாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பப்பு சிங் (வயது51). இவர் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கேக் ஷாப் அமைந்திருக்கும் சிவானந்த காலனி சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது.

அப்போது,பப்புசிங் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத கும்பல், அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2,200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.முதியவர் கூச்சலிட்டு உதவிக்கு பொதுமக்களை அழைக்கும் முன்னே வழிப்பறிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் பப்பு சிங் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுவர்கள் 2 பேர், 17 வயது சிறுவன் ஒருவர் ஆகியோர் பிடிபட்டனர்.தப்பியோடிய கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் முதியவரைத் தாக்கிய பணம், செல்போன் பறிப்பில் சிறுவர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...