கோவையில் முதியவரைத் தாக்கி செல்போன், பணம் பறிப்பு - சிறுவர்கள் 3 பேர் கைது!

கோவை சிவானந்தகாலனி சாலையில் இரவில் பப்புசிங் என்ற முதியவர் நடந்து சென்றபோது, அவரை அடித்து துன்புறுத்தி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில்16, 17 வயது என 3 சிறுவர்கள் கைதாகியுள்ளனர். தலைமறைவாகியுள்ள கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை நாகராஜபுரத்தை சேர்ந்தவர் பப்பு சிங் (வயது51). இவர் பேக்கரி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கேக் ஷாப் அமைந்திருக்கும் சிவானந்த காலனி சாலையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளது.

அப்போது,பப்புசிங் என்னிடம் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத கும்பல், அவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 2,200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது.முதியவர் கூச்சலிட்டு உதவிக்கு பொதுமக்களை அழைக்கும் முன்னே வழிப்பறிக் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர்.

இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் பப்பு சிங் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், 16 வயது சிறுவர்கள் 2 பேர், 17 வயது சிறுவன் ஒருவர் ஆகியோர் பிடிபட்டனர்.தப்பியோடிய கிறிஸ்டோபர் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் முதியவரைத் தாக்கிய பணம், செல்போன் பறிப்பில் சிறுவர்கள் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...