கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து மார்ச் 12-யில் போராட்டம் நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா அரசைக் கண்டித்து வருகிற மார்ச் 12- ஆம் தேதியன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து போராட்டம் நடத்த இருப்பதாக கோவையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள எல்லைக்குள் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகின்றது.

அதில் பாலக்காடு மாவட்டம் தேக்குவட்டை என்ற இடத்தில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் மஞ்சகண்டி உள்ளிட்ட மற்ற இடங்களில் தடுப்பு அணைகள் கட்டும் பணியினை துரிதப்படுத்தியுள்ளது.

இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் விவசாயம் மட்டுமில்லாது குடிநீர் தட்டுபாடும் மிக பெரிய அளவில் ஏற்படும் என்பதால் கேரளா அரசு தடுப்பணைகள் கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

இந்த சூழலில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் திமுக, தந்தை பெரியார் திராவிட கழகம், கொங்கு ஜனநாயக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியவை பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், முத்துச்சாமி, தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வழித்தடமான க.க.சாவடியை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வருகிற மார்ச் 12 ஆம் தேதி கோவையில் இருந்து கேரளா செல்லும் அனைத்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...