பொள்ளாச்சியில் குண்டும் குழியுமான சாலைகள் - சாலையில் வாழைமரத்தை நட்டு பாஜகவினர் போராட்டம்

உடுமலை - கோவை சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதாக கூறி கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில் பாஜகவினர், சாலையின் நடுவே வாழை மரத்தை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.



மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் ஆங்காங்கே சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை - கோவை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சாலை பல நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி நகர பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில், பழுதடைந்த சாலையின் நடுவே வாழை மரத்தை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதால் தபால் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தால் கோவை - உடுமலை - பொள்ளாச்சி சந்திப்பு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...