கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்த மயில்கள் - வனத்துறை விசாரிக்க கோரிக்கை

கோவை டாடாபாத் பகுதியில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் விசாரணை நடத்தவில்லை என்றும், மயில்கள் கடந்த சில நாட்களாக சமூக விரோதிகளால் வேட்டையாடப்படும் நிலையில், உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் அருகே மயில்கள் இறந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் இரண்டு மயில்கள் இறந்து கிடந்துள்ளன. அதில் ஒரு மயிலை நாய்கள் தூக்கிச் சென்றிருக்கின்றன. இந்நிலையில் மயில்கள் இறப்பு குறித்து வனத்துறையினருக்குத் தகவல் அளித்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இறந்த மயில்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததா? அல்லது வேட்டையாடப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு மருந்துக்காகவும், இறைச்சிக்காகவும் சமூக விரோதிகளால் மயில்கள் வேட்டையாடப்பட்ட சம்பவமும் கோவையில் அரங்கேறி உள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...