கோவையில் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடிய மாவட்ட எஸ்.பி!

கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்களை மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.


கோவை: ராக்கிபாளையத்தில் வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்க மாவட்ட எஸ்.பி.பத்ரி நாராயணன் கலந்துரையாடினார்.

தமிழகம் முழுவதும் வடமாநில தொழிலாளர் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. இது போலியான வீடியோ என அரசு மறுத்துள்ளது. இருப்பினும் வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்து சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தைப் போக்க கோவை மாவட்ட போலீசார் அவர்களை நேரில் சந்தித்து அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை துடியலூர் அடுத்த ராக்கிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று இந்த நிறுவனத்திற்கு மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் வந்தனர். அப்போது அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்களுடன் எஸ்.பி. பத்ரி நாராயணன் இந்தியில் பேசி கலந்துரையாடினார்.

அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இதுபோன்ற வீடியோக்களையும், வதந்திகளையும் நம்ப வேண்டாம். தொடர்ந்து நீங்கள் வேலை பாருங்கள் என அறிவுரை கூறினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் வடமாநிலத்தவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று இங்கு வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இவர்களிடம் பேசிய பிறகு, தொழிலாளர்கள் அனைவரும் பயமின்றி பணியாற்றி வருவது தெரியவந்தது. ஊரில் உள்ள அவர்களின் உறவினர்கள் தான் வீடியோக்களை அனுப்பி இவர்களிடம் கேட்டு வருகின்றனர். இவர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து விட்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு ஏதாவது குறைகள், புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு செல்போன்கள் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்நேரம் வேண்டும் ஆனாலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...