கோவையில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் ஆய்வு - தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

கோவை மதுக்கரை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் கல்குவாரிகளில் நேரில் ஆய்வு செய்து, ஆய்வு அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையை அடுத்த மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் நடக்கும் கனிமவளக் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, கடந்த பிப்., 26ல், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கிணத்துக்கடவு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்நிலையில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் சசிக்குமார் தலைமையிலான குழு, மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளில் அனுமதி பெற்ற அனுமதி பெறாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் குறித்து ஆய்வு செய்தது. அதனடிப்படையில் அரசுக்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், மதுக்கரை மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் தலா 100 குவாரிகள் மற்றும் கிரஷர்கள் உள்ளன. இதிலிருந்து வெளியேறும் துகள்கள் விவசாயத்திற்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், கிரஷர் மற்றும் குவாரிகளை சுற்றிலும் நைலான் மற்றும் கம்பி வலை அமைக்கவும், துணியாலான மாசுத்தடுப்பு சல்லடை அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாத கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இந்த வலை மற்றும் துணியை பயன்படுத்தினால் விவசாய நிலங்களுக்கோ சுற்றுச்சூழலுக்கோ பாதிப்பு ஏற்படாது, என்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...