முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்..! - நீதிமன்றத்தில் சேட்டை செய்த குடிமகனால் பரபரப்பு

கோவை போத்தனூரை சேர்ந்த அப்துல் நாசிர், திருட்டு வழக்கின் விசாரணைக்காக மதுக்கரை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது "உங்களால் முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்" என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் போத்தனுர் பாஜனை கோவில் வீதியை சேர்ந்த ஷேக் இப்ராகிம் என்பவரின் மகன் அப்துல் நாசிர்(வயது28).

திருட்டு வழக்கு குற்றவாளியான இவர், மதுக்கரை உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். அப்போது நீதிமன்ற ஊழியர், குற்றவாளியான அப்துல் நசீரை நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக அவரின் பெயரை சொல்லி அழைத்துள்ளார்.

குடிபோதையில் நீதிமன்றதிற்கு வந்திருந்த அப்துல் நசீர், ஆத்திரத்துடன் "உங்களால் முடிந்ததால் என்னை உள்ளே போடுங்கள் பார்க்கலாம்" என்று சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் நீதிமன்ற பணிகள் பாதித்தது. மதுக்கரை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தலைமை பொறுப்பு எழுத்தர் மனோகரன் இதுகுறித்து மதுக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் மதுக்கரை போலீசார் விரைந்து வந்து நீதிமன்ற ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட அப்துல் நசீரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வாய்தாவில் ஆஜராக வந்த திருட்டு வழக்கு குற்றவாளி ஒருவர் நீதிமன்ற ஊழியர்களிடம் குடிபோதையில் தகராறு செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...