உடுமலை அருகே ஒற்றை யானை நடமாட்டம் - 2வது முறையாக பேருந்து கண்ணாடி உடைப்பு!

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மறையூர் சாலையில் படையப்பா எனும் காட்டு யானையின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இரண்டாவது முறையாக அந்த வழியாக வந்த பேருந்தின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள மறையூர் பகுதியில் கடந்த சில தினங்களாகவே படையப்பா என்ற ஓற்றைய யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும், குடியிருப்புகள் பகுதிகளில் சுற்றி திரிந்த யானை, கடந்த இரண்டு தினங்களாக சாலைகளில் உலா வந்து கொண்டுள்ளது.



இந்த நிலையில் இன்று காலையில் உடுமலையிலிருந்து மூணாறு சென்ற கேரளா அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் பேருந்தின் முன்பகுதி பக்கவாட்டு பகுதியில் உருட்டிவிட முயற்சி செய்தபோது பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.



இதனால், உள்ளிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒரு மணி நேரம் கழித்து கழித்து யானை சாலையைக் கடந்து சென்றதும் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். இதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பும் இரவு நேரத்தில் கேரளா அரசு பேருந்தை இதே படையப்பா என்ற யானை தாக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை மூணாறு வழித்தடத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம். எச்சரிக்கையாக செல்லுமாறு வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

சாலைகளில் யானைகள் நின்றிருந்தால் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சாலைகளில் வனவிலங்குகள் தென்பட்டால் அருகில் செல்லக்கூடாது. ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது, என்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...