கோவையில் மாடியிலிருந்து தவறி விழுந்து 12ம் வகுப்பு மாணவி பலி - போலீஸ் விசாரணை

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங்யுனிட் குடியிருப்புப் பகுதியில் 13வது மாடியில் இருந்து தவறி விழுந்து 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மாணவி தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான 1848 வீடுகள் உள்ளன. இவைகள் ஏ, பி, சி டி என 4 பிரிவிகளாக பிரிக்கப்பட்டு அரசு ஊழியர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டி பிளாக்கில் 13வது மாடியில் வசித்துவரும் கோவை மாநகராட்சியில் வேலை செய்யபவரின் மகள் தாரணி என்பவர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்றிரவு இரவு 9 மணி அளவில் திடீரென 13வது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலை, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



அவர் நேற்று பொதுத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெற்று வந்த நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.



உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தாரணி தவறிவிழுந்து உயிரிழந்தாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...