கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போக்சோ குற்றவாளி உயிரிழப்பு!

பாலியல் வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் இருந்து வந்த பழனிசாமி என்ற முதியவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது67). பழனிச்சாமி துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் இருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு டிபி நோய் ஏற்பட்ட நிலையில், சிறை மருத்துவர் சிகிச்சை அளித்துவந்தனர். அவரது பரிந்துரையின் பெயரில் கோவை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பழனிசாமி மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 4ம் தேதி முதல் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...