உலக மகளிர் தினம் - கோவையில் கேக் வெட்டி கொண்டாடிய பெண் ஊடகவியலாளர்கள்!

கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் பெண் ஊடகவியலாளர்கள், கோவை பிரஸ் கிளப் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். அவர்களுக்கு ஆண் ஊடகவியலாளர்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.


கோவை: சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர்கள் கேக் வெட்டி மகளிர் தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊடகவியலாளர்களும், அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...