கோவை அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சோமையனூர் பகுதியை சேர்ந்த பாலாமணி, வீட்டின் அருகில் யானை நின்றதை பார்த்து குழந்தைகளுடன் ஓட முயன்றுள்ளார். அப்போது பாலாமணியை யானை தாக்கி காயமடைந்தார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கியதால் காட்டுயானைகள் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சோமையனூர் பகுதியில் வசித்துவரும் பாலாமணி என்ற பெண், யானை பிளிறும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது வீட்டிற்கு வெளியில் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. இதனால், அச்சமடைந்த பாலாமணி அவரது இரு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஓட முயன்றுள்ளார்.

அப்போது யானை பாலாமணியை தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவரும் குழந்தைகளும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாலாமணிக்கு யானை தாக்கி கீழே விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு தற்பொழுது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் என்பதால் வனத்துறையினர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...