கோவை அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சோமையனூர் பகுதியை சேர்ந்த பாலாமணி, வீட்டின் அருகில் யானை நின்றதை பார்த்து குழந்தைகளுடன் ஓட முயன்றுள்ளார். அப்போது பாலாமணியை யானை தாக்கி காயமடைந்தார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கியதால் காட்டுயானைகள் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சோமையனூர் பகுதியில் வசித்துவரும் பாலாமணி என்ற பெண், யானை பிளிறும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது வீட்டிற்கு வெளியில் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. இதனால், அச்சமடைந்த பாலாமணி அவரது இரு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஓட முயன்றுள்ளார்.

அப்போது யானை பாலாமணியை தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவரும் குழந்தைகளும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாலாமணிக்கு யானை தாக்கி கீழே விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு தற்பொழுது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் என்பதால் வனத்துறையினர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...