கோவை அருகே காட்டுயானை தாக்கி பெண் படுகாயம் - அச்சத்தில் மக்கள்!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சோமையனூர் பகுதியை சேர்ந்த பாலாமணி, வீட்டின் அருகில் யானை நின்றதை பார்த்து குழந்தைகளுடன் ஓட முயன்றுள்ளார். அப்போது பாலாமணியை யானை தாக்கி காயமடைந்தார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் உள்ளன. தற்போது கோடைக்காலம் துவங்கியதால் காட்டுயானைகள் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை சோமையனூர் பகுதியில் வசித்துவரும் பாலாமணி என்ற பெண், யானை பிளிறும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தபோது வீட்டிற்கு வெளியில் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. இதனால், அச்சமடைந்த பாலாமணி அவரது இரு குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி ஓட முயன்றுள்ளார்.

அப்போது யானை பாலாமணியை தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவரும் குழந்தைகளும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாலாமணிக்கு யானை தாக்கி கீழே விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு தற்பொழுது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்களுமின்றித் தப்பினர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில் யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் என்பதால் வனத்துறையினர் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணிகளை துரிதப்படுத்தி யானை குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...