உலக மகளிர் தினம் - பல்லடம் அரசு பள்ளியில் பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு!

மகளிர் தினத்தை ஒட்டி சட்டப்பணிகள் குழு சார்பில் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து நீதிபதிகள் சித்ரா, சந்தான கிருஷ்ணசாமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமில் பல்லடம் நீதிபதிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா,சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, மூத்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் குறித்தும் பள்ளி குழந்தைகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் பெண்கள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...