துடியலூர் அருகே ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதி விபத்து!

கோவை கே.என்.ஜி.புதூர் சாலையில் சென்ற கார் ஒன்று மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், திடீரென காரின் ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஏர்பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்மேடு தவசி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாச்சலம் மூர்த்தி (37). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் தனது காரில் கே.என்.ஜி புதூர் பகுதியில் இருந்து ஜி.என்.மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருதாச்சலம் மூர்த்தி கே.என்.ஜி புதூர் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐயன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார்.



இந்நிலையில் விபத்தின் போது காரில் இருந்த ஏர் பேக் திடீரென திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வலது புறத்தில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் மருதாச்சலம் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...