தாராபுரத்தில் மகளிர் தின சட்டவிழிப்புணர்வு முகாம் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாமில், நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து மகளிர் தின விழா நிகழ்ச்சியை நடத்தியது. விழாவில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.



இந்த மகளிர் தின விழாவில் தாராபுரம் சார்பு நீதிபதி தர்ம பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நீதிபதி பாபு, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் எஸ் கே .கார்வேந்தன், தங்கராஜ், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலைச்செழியன், இந்துமதி, தாராபுரம் சார்பு நீதிபதியின் துணைவியார் கௌசல்யா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.



விழாவில் 30 பெண் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.



முன்னதாக பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டிகள், கோலம் போடுதல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...