கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு விருது - ஸ்வட்ச் பாரத் மிஷனை சிறப்பாக செயல்படுத்தியதற்குப் பாராட்டு

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பறையில் கியூ.ஆர். கோட் முறையினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்புக்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.


கோவை: சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்துறையின் அமைச்சர் திரு.கே.என் நேரு பங்கேற்று தலைமை வகித்தார்.



அதில், ஸ்வச் பாரத் மிஷன்(Swachh Bharat Mission) 2.0 திட்டத்தில் சமூகக் கழிப்பறை/பொதுக் கழிப்பறையில் கியூ.ஆர் கோடு(Q.R.Code) பயன்படுத்தி உபயோகிக்கும் முறையினை 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்புக்கு, அமைச்சர் கே.என். நேரு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பி.பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...