கோவையில் உடற்பயிற்சி செய்த இளைஞர் மயங்கி விழுந்து பலி

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்த தாயுமானவன்(27) என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்த வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சேலத்தை சேர்ந்தவர் தாயுமானவன் (27). இவர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையிலிருந்த தாயுமானவன் உடற்பயிற்சி செய்தார்.

அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...