பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்பட அறநிலையத்துறை கோயில்களில் பக்தர்கள் வசதிக்காக தரைவிரிப்புகள், கூலிங் பெயிண்ட், பச்சை நிற மேட் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்கும் வகையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில் உள்ளிட்ட அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. 98 டிகிரி முதல் 100 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் குடும்பத்துடன் ஆன்மீக தளங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படி செல்லும் பக்தர்கள் வெயில் காரணமாக கோயில் பிரகாரத்தை சுற்றி வலம் வரும்போது கால்கள் சுடுவதால் சிரமம் அடைகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு பிரசித்தி பெற்ற கோயில் பிரகாரங்களின் நடைபாதைகளில் தேங்காய் நார் விரிப்புகள், வெப்பத்தை தடுக்கின்ற கூலிங் பெயிண்ட் அடித்தல், அடிக்கடி தண்ணீர் தெளிக்க வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், மருதமலை, கோனியம்மன் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மருதமலை முருகன் கோயிலில் பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் வலம் வர தரைவிரிப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் பிரகாரத்தை சுற்றி தரையில் கூலிங் பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. கோனியம்மன் கோயிலில் முதலில் கூலிங் பெயிண்ட் அடித்த போதும், பக்தர்கள் கால்கள் சுடுவதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பச்சை நிற மேட் கோயில் பிரகாரத்தில் போடப்பட்டுள்ளது. இது நல்ல பலன் அளித்துள்ள நிலையில், மாநகரில் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோயில்களிலும் பச்சை நிற மேட் போடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால், பக்தர்கள் வெயிலின் சூடு பாதிக்காத வகையில் பிரகாரத்தை வலம் வந்து சாமி தரிசனம் செய்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...