கோவை வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது வழக்கு பதிவு

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரில் பழக்கடை நடத்தி வரும் பாலமுருகன் என்பவரை, தொழில் போட்டி காரணமாக தகாத வார்த்தைகளில் பேசி, கல்லால் தாக்கிய பிரேம்குமார் மற்றும் தங்கவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: வெள்ளலூரில் பழக்கடை உரிமையாளரை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் பெருமாள் ஶ்ரீநகரை சேர்ந்தவர் பாலமுருகன் (19). இவர் அதே பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடையின் அருகே வெள்ளலூர் அம்மன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவரும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

தொழில் ரீதியாகப் பாலமுருகன் மற்றும் பிரேம்குமார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று பாலமுருகன் கடையிலிருந்த போது அங்குச் சென்ற பிரேம்குமார் மற்றும் தங்கவேல் (40) ஆகிய இருவரும் பாலமுருகனை தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஓரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரேம்குமார், பாலமுருகனை கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேம்குமார் மற்றும் தங்கவேலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...