துடியலூர் சாய்பாபா கோயில் திருவிழா - 108 பால்குடம் சுமந்து வந்த பெண்கள்!

கோவை துடியலூர் அடுத்த ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகரில் உள்ள ஸ்ரீ குபேர ஷீரடி சாய்பாபா கோயிலின் 4 ஆம் ஆண்டு திருவிழாவில் 108 பெண்கள் ஊர்வலமாக கொண்டு வந்த பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி பாலாபிஷேகம் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே சாய்பாபா கோவிலின் 4ஆம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ குபேர ஷீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இக்கோவிலின் 4ம் ஆண்டு விழா இன்று காலை விக்னேஷ்வர பூஜை, லட்சுமி குபேர ஹோமம் பூஜையுடன் தொடங்கியது.



இந்த விழாவில் தொப்பம்பட்டி அரசடி ராஜகணபதி கோயிலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் என 108 பேர் பால் குடம் எடுத்து வந்தனர்.



இந்த பால் குட ஊர்வலமானது தொப்பம்பட்டியில் இருந்து ஜங்கமநாயக்கன்பாளையம் சுமங்கலி நகர் சாய்பாபா கோயிலுக்கு வரும் வழியில் உள்ள மாகாளி அம்மன் கோவிலில் வழிபட்ட பின் கோவிலை வந்தடைந்தனர்.



108 கலச பால்குடங்களை சாய்பாபா மீது ஊற்றி அபிஷேக பூஜை ஆராதனை நடைபெற்றது.



தொடர்ந்து சிறப்பு பூஜைகள் தீபராதனை வழிபாடு நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



மேலும், இதில் நடைபெற்ற பஜனை பாடல் இசை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 



பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் சுரேஷ்குமார், கார்த்தி மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...