கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு - 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ!

கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் மங்கலூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனிடையே, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, பெரோஸ், உமர்பாரூக், அசாரூதீன் உள்ளிட்டோரை கோவை அழைத்துவந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாக கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தேசிய முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...