கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு - 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் என்.ஐ.ஏ!

கோவையில் கார் குண்டுவெடிப்பு வழக்கில் இதுவரை 11 பேரை என்ஐஏ போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மற்றும் மங்கலூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் அமைப்பு அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டது.

இதனிடையே, கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதின், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் 5 பேரையும் காவலில் விசாரிக்க என்.ஐ.ஏக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, பெரோஸ், உமர்பாரூக், அசாரூதீன் உள்ளிட்டோரை கோவை அழைத்துவந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு வழக்கில் முன்னதாக கைபற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக தேசிய முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...