கோவை அருகே சாலையை சீரமைக்கக்கோரி திடீர் மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிஎன் பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கலைந்துச் சென்றனர்.



கோவை: கோவை துடியலூரில் இருந்து பன்னிமடை வழியாக வரப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாய் பதிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. 

அப்பணிகள் முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆகியும் சாலை பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக, மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியும் ஆகி, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன.

இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சங்கர் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இந்த பகுதியில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்டவைகள் உள்ளதால், பள்ளி, கல்லூரி வாகனங்களும் இந்த வழியாக சென்று வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களும் அவர்களது பெற்றோர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அனைவரிடமும் புகார் மனு கொடுத்திருந்தனர்.



அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இன்று காலை பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பன்னிமடையில் இருந்து வரப்பாளையம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.



இதனால், அந்த வழியாக சென்ற அனைத்து பள்ளி கல்லூரி வாகனங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி நமச்சிவாயம், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் குமார், தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நாயனார், மண்டல அலுவலர் ஜோதி மற்றும் போலீசார் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், அவர்கள் உடனடியாக சாலை போடுவதற்கான நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரியிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்என்று தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...