ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் - ரூ.89 லட்சத்திற்கு விற்பனை

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்திற்கு 3961 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8292-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6840-க்கும் சராசரி விலை ரூ 7350-க்கும் விற்பனையானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று பருத்தி விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 420 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு, சேலம் கோவை மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வணிகர்கள், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8292-க்கும் குறைந்தபட்சவிலையாக ரூபாய்.6840-க்கும் சராசரி விலை ரூ 7350-க்கும் விற்பனையானது. விற்பனைக்கு வந்த பருத்தியின் மொத்த அளவு 3961மூட்டைகள். அவற்றின் குவிண்டால் அளவு 1216.30. 18 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்த பருத்தியின் மொத்த மதிப்பு ரூபாய் 89,05,091/-.என முதுநிலை செயலாளர் திருப்பூர் விற்பனைக்குழு திரு.கண்ணன்(பொறுப்பு) தெரிவித்தார்.

ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...