கோவையில் பட்டப்பகலில் ஐடி ஊழியர் வீட்டில் புகுந்து மின்னணு சாதனங்கள் கொள்ளை!

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ் என்பவர் வீட்டில், பட்டப்பகலில் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் லேப்டாப், ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மர்ம நபர் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்துவிட்டு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பதுபோல வந்த மர்ம நபர், அக்கம் பக்கம் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட முடிவெடுத்திருக்கிறார்.

அதனடிப்படைதில் வீடுகளில் உள்ளவர்களிடம் விலாசம் கேட்ட அந்த மர்ம நபர், ஐடி ஊழியரான டோமினிக் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் இரவு பணி முடித்த நிலையில், அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தார்.

அவரை எழுப்பாமல் அப்படியே நைசாக உள்ளே சென்று வீட்டிலிருந்த மின்னணு சாதனங்களான ஆப்பிள் மேக் மடிக்கணினி, டெல் அடாப்டர், உயர் ரக ஹெட்செட், வையர்லஸ் நெக் பேண்ட், ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் வாட்ச், பேக் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளையடித்து நொடிப்பொழுதில் ஓட்டம் பிடித்தார்.



அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறிய அந்த மர்ம நபர், மருத்துவமனை செல்ல வேண்டும், அவசரமாக போங்க என்றார். பள்ளி செல்லும் வாகனம் என்பதால் மருத்துவமனை செல்ல முடியாது என்று தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டார்.

அப்போது எங்கு செல்வதென்று தெரியாமல் மர்ம நபர் தடுமாறும் காட்சி வெளியாகி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. லேப்டாப் பேக்குடன் அந்த நபர் ஓடும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி ஊழியர் தந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலிஸார் வழக்கு பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...