திருப்பூரில் சாக்கடை கால்வாய் பணியால் சோகம் - சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி

திருப்பூர் அருள்ஜோதிபுரத்தில் சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 10ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: அருள்ஜோதிபுரம் பகுதியில்சாக்கடை கால்வாய் அமைக்க குழி தோண்டியபோது, வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.



திருப்பூர் மாநகராட்சி, முதலாம் மண்டலத்திற்குட்பட்ட அருள்ஜோதிபுரம் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட குழியின் காரணமாக அப்பகுதியில் இருந்த வீட்டின் சுற்றுச்சுவர்கள் பலமிழந்து காணப்பட்டது.



இந்நிலையில் சாலைக்கும், வீட்டிற்கும் நடுவே தோண்டிய குழியின் இடைவெளியைக் கடக்க அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் அபிராம் என்ற மாணவன், மரப்பலகையைக் குறுக்கே போடுவதற்கு முற்பட்டபோது, வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து அபிராம் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனடியாக சுவர் இடிபாடுகளை அப்புறப்படுத்தி மாணவனின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் அங்குப் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மாணவனின் தந்தை கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இறந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...