கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது - செல்போன், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த அசாருதீன், சர்புதீன் என இருவரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் முஜிபுர் ரஹ்மான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கோவை குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் குறிச்சிகுளம் அமைந்துள்ளது. குளக்கரை அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. பள்ளியின் பின்புறம் சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்று வந்த இருவரை பிடித்தனர்.

காவல்துறை விசாரணையில், இருவரும் பிஸ்மி நகரைச் சார்ந்த அசாருதீன் (வயது30), லவ்லி கார்டன் பகுதியைச் சார்ந்த சர்புதீன் (வயது32) என்பது தெரியவந்தது. ஓட்டுநராக இவர்கள் பணியாற்றி வரும் நிலையில், கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்தது உறுதியானது. இதில் அசாருதீன் மீது ஏற்கனவே பந்தய சாலை மற்றும் பஜார் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக தந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைதான நபர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...