கோவையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி பெண் பலி!

கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் லாட்ஜில் தங்கி இருந்த கிருஷ்ணன் - கிருத்திகா இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 26). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் வந்தனர். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறைத்து எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் எலி மருந்து குடித்தனர். வாடகை கேட்க சென்ற தங்கும் விடுதி ஊழியர்கள், இதைப் பார்த்து 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...