நீலகிரியில் இருந்து கர்நாடகாவிற்கு யானை தந்தம் கடத்திய மூன்று பேர் கைது


நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வருவதாக கர்நாடக மாநில குண்டல் பேட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில், அவ்வழியாக வந்த காரை சோதனையிட்ட குண்டல்பேட்டை காவல் துறையினர் ஒரு காரில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானை தந்தங்கள் கடத்தி வரப்பட்டதை கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, இக்கடத்தலில் ஈடுபட்ட சேரம்பாடியைச் சேர்ந்த சோமன் (50), எருமாடு பகுதியைச் சேர்ந்த மோகன் குஞ்சான் (45), கேரள மாநிலம் திருசூர் சேர்ந்த ஸ்டீபன் (44) ஆகிய மூன்று பேரையும் குண்டல்பேட்டை காவல் ஆய்வாளர் பிரமோத் குமார், புலனாய்வு குழு மற்றும் சிறப்பு அதிரடிப்படை நாகராஜ் ஆகியவர்கள் சுற்றி வழைத்து பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து, அவர்களிம் இருந்து 3 யானை தந்தம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கேரள பதிவு எண் கொண்ட மாருதி கார் ஆகியவை பரிமுதல் செய்யப்பட்டது.

இதில், சோமன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு கல்லத்தனமாக துப்பாக்கி வைத்திருந்ததாக குண்டல்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கோபி அவர்களால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...