கனிமவளக் கொள்ளையை அரசு தடுக்க வேண்டும்..! - கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். இல்லாவிடில் மீண்டும் போராட்டம் நடக்கும் என்று கோவை எட்டிமடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.



கோவை: கடந்த இரு மாதங்களுக்கு முன் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் இருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு வீடியோக்கள் வெளியானது.

அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு அதிகப்படியான கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பல்வேறு விவசாய சங்கங்கள் அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று எட்டிமடை பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



அச்சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.



ஆனால் முதலமைச்சர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளதாகவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பாமல் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் கனிம வள கொள்ளையை தடுப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்ப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி, கனிமவள கொள்ளை தடுக்கப்பட வேண்டும். தனி வசூலை நிறுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகளை தடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் நிலநடுக்கம், நிலச்சரிவு வரும் பட்டியலில் கோவை இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் கனிமவளக் கொள்ளையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் மீண்டும் போராட்டம் மேற்கொள்வோம், என்றார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...