திருப்பூரில் மாநில அளவிலான காதி மற்றும் கிராம தொழில் ஆணைய கண்காட்சி - தொடங்கி வைத்த எம்.எஸ்.எம்.இ தலைவர்!

திருப்பூர் அடுத்த வாலிபாளையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் மாநில அளவிலான கண்காட்சி இன்று தொடங்கி மார்ச் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் காதி மற்றும் கிராம ஆணையத்தின் மாநில அளவிலான கண்காட்சியை எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் இன்று துவக்கி வைத்தார்.



திருப்பூர் மாவட்டம் வாலிபாளையம் சாலையில் உள்ள ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் காதி கண்காட்சி இன்று முதல் வரும் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம்.இ ஆணைய தலைவர் மனோஜ் குமார் கலந்து கொண்டு, கண்காட்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கண்காட்சியை நேரில் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரதம மந்திரியின் பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தொழில் துவங்க உதவித்தொகை வழங்கப்பட்டது.



இந்த விழாவில் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.பாண்டே, இயக்குனர் ரித்தேஷ் குமார், மாநில இயக்குனர் பி.என். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...