கலைஞரின் மகன் என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவில்லை, உழைப்பால் வந்தவர் - அமைச்சர் காந்தி பாராட்டு

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் காந்தி, பேரறிஞர் அண்ணா, கலைஞரை தொடர்ந்து நெசவு தொழிலுக்கு முக்கியத்துவம் தந்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், நெசவுத் தொழிலை காப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தான் முடியும் எனவும் கூறினார்.


கோவை: கலைஞரின் மகன் என்பதால் மட்டும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவில்லை, ஒவ்வொரு பொறுப்பிலும் கடுமையாக உழைத்து வந்தவர் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் தமிழ்நாடு விசைத்தறி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கைத்தறித்துறை அமைச்சர் காந்தி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 22 மாதங்கள் தான் ஆகிறது. அவர் பொறுப்பு ஏற்கும் பொழுது தமிழ்நாடு கொரோனா நிலைமையில் இருந்தது. அதன்பின் முதல்வரின் நடவடிக்கையால் கொரோனா இல்லை என்ற நிலைமை தமிழ்நாட்டிற்கு வந்தது.

கொரோனா முதல் முதலில் வரும்போது, எதிர்க்கட்சித் தலைவராக சில கோரிக்கைகளை முன் வைத்தார். குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு 4000 ரூபாயை பொது மக்களுக்கு வழங்கினார்.

நெசவுத் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தது அண்ணா, அதனை தொடர்ந்து கலைஞர் அடுத்து நமது முதல்வர் தான் வழங்கியுள்ளார். இவரையடுத்து யாரும் இதுபோன்று முக்கியத்துவத்தை தர இயலாது.

மேலும் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகனாக இருப்பதால் மட்டும் முதலமைச்சர் ஆகவில்லை, சிறுவயதில் இருந்து தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு ஒவ்வொரு பொறுப்பிலும் சிறப்பாக பணியாற்றி முதலமைச்சராக வந்தவர். நமது நெசவுத் தொழிலை காப்பதற்கு நமது முதலமைச்சரால் தான் முடியும்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...