கோவை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!


தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப் போய் உள்ளதாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக வறட்சியின் காரணமாக விவசாயிகள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வறட்சியானது பசுமை செழித்திருந்த கோவை மாவட்டத்தையும் சமீப காலமாக தாக்கி வருகின்றனது. அதன் படி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக இருந்த சிறுவாணி, அத்திக்கடவு, பவானி, ஆழியார் உள்ளிட்ட அணைகளுக்கு சரியான நீர் வரத்து இல்லாததாலும், பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததின் காரணத்தாலும் கோவையில் தற்போது வறட்சி நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

ஏற்கனவே இருக்கும் பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...