வடகோவை அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம் - ரயில்வே போலீசார் விசாரணை!

வடகோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 40 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை வடகோவை ரயில்நிலையம் அருகே ரயிலில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், விபத்தா, தற்கொலையா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இது விபத்தா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உலகத்திறன் போட்டிகள் 2027-க்கான பதிவு தொடக்கம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஷாங்காய், சீனா 2026ல் நடைபெறும் உலகத்திறன் போட்டிகளுக்கான இந்தியத் திறன் போட்டிகள் 2027-க்கு பதிவுகள் துவங்கின. 16 முதல்...

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...